கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, தெலுங்கானா அரசு தனது 'காலை உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தை' தொடங்கியுள்ளது.
இத்திட்டமானது மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் இளையோர் கல்லூரிகளில் மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை உள்ளடக்கியது.
மாநில அரசு இதற்காக ஆண்டுதோறும் ₹720 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் காலை உணவுக்கு ₹540 கோடியும், பால் மற்றும் கேழ்வரகு மால்ட் விநியோகத்திற்காக ₹180 கோடியும் அடங்கும்.
அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 29 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டமானது எட்டு மாவட்டங்களில் உள்ள 1,302 கல்வி நிறுவனங்களை (1,269 அரசுப் பள்ளிகள் மற்றும் 33 இளையோர் கல்லூரிகள்) உள்ளடக்கியதுடன், இதன் மூலம் சுமார் 1.44 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.