கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே. பெட்டஹள்ளி கிராமத்தில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்மொழி ஹொய்சளர்கள் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டது.
இந்தக் கல்வெட்டு என்பது ஹொய்சளர் வம்சத்தின் முதலாம் நரசிம்மரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.
ஒன்பது வரிகளுடன் கூடிய வெள்ளை கிரானைட் பலகையில் பொறிக்கப்பட்டுள்ள இது பாண்டவபுரா தாலுகாவில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் கண்டெடுக்கப் பட்டது.
இந்தக் கல்வெட்டு கன்னடம், தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கன்னட எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
இது தண்டநாயக்கா (இராணுவத் தளபதி) காரைக்குடி தில்லைக் கோட்டை ஸ்ரீ யாதவ நாராயணா கோவிலில் (இன்றைய கெரே தோன்னூர்) கோயில் சடங்குகளுக்காக என நிலம் வழங்கியதை இது பதிவு செய்கிறது.