மாதவிடாய் ஆரோக்கியம் குறித்து சமூக ஊடகங்களில் மிகவும் ஆபத்தான தவறான தகவல்கள் பரவியிருப்பதாக கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.
இந்தியப் பெண்களில் சுமார் 71.6% பேர் சமூக ஊடகங்கள் மாதவிடாய் குறித்து தகவல் தருவதாகக் கருதுகின்றனர், ஆனால் அவசரக் காலங்களில் 11.5% பேர் மட்டுமே அதை நம்புகிறார்கள்.
சுமார் 82.7% பேர் மாதவிடாய் வலியை அனுபவிக்கின்றனர், ஆனால் சுமார் 41.5% பேர் வலி நிவாரணத்தைப் பயன்படுத்துவதில்லை.
யுனிசெஃப் தரவுகளின்படி, உலகளவில், சுமார் 500 மில்லியன் பெண்களுக்கு மாத விடாய் காலச் சுகாதாரப் பேணுதலுக்கான வசதிகள் கிடைக்கப் பெறுவதில்லை.
இது பெண்களுக்கான சுகாதார நிபுணத்துவ அமைப்பான everteen என்ற அமைப்பால் வெளியிடப் பட்டது.