2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில ஆற்றல் திறன் குறியீட்டு (SEI) அறிக்கையை மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
இது 2020-21 மற்றும் 2021-22 நிதியாண்டுக்கான ஆற்றல் திறன் செயல்படுத்தல் மீதான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வருடாந்திர முன்னேற்றம் பற்றிய ஒரு அறிக்கை ஆகும்.
இந்த அறிக்கையானது மிகை ஆற்றல் திறன் பொருளாதாரக் கூட்டணி (AEEE) உடன் இணைந்து ஆற்றல் திறன் பணியகத்தால் (BEE) உருவாக்கப்பட்டது.
இது மேம்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்புடன் சீரமைக்கப்பட்ட 50 குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணிப் பிரிவில் (>60 புள்ளிகள்) உள்ளது.
அசாம், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சாதனையாளர் பிரிவில் (50-60 புள்ளிகள்) உள்ளது.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அசாம் மற்றும் சண்டிகர் ஆகியவை அந்தந்த மாநிலக் குழுக்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களாக திகழ்கிறது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் கடந்த வருட நிலையை விட அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து உள்ளது.