மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமனத்திற்கான விதிகளை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) மாற்றியமைத்துள்ளது.
டிஜிபி தேர்வுப் பட்டியலுக்குத் தகுதியான அதிகாரிகளின் பெயர்களை அனுப்புவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், மாநிலங்கள் இனி இந்திய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.
தற்போதைய டிஜிபி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பே மாநிலங்கள் UPSC-க்கு முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும்.
காவல்துறை சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிபி நியமனங்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கிய 'பிரகாஷ் சிங் Vs இந்திய ஒன்றியம் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த விதிமுறை வந்துள்ளது.
"பொறுப்பு டிஜிபி" என்ற பதவி என எதுவும் கிடையாது என்றும், மாநிலங்கள் வழக்கமான டிஜிபியையே நியமிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
UPSC மூன்று மூத்த IPS அதிகாரிகளைக் கொண்ட குழுவைத் தயாரிக்கும், அதிலிருந்து மாநில அரசு டிஜிபியைத் தேர்ந்தெடுக்கும்.