தமிழ்நாடு அரசானது, உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரை அதன் தலைவராகக் கொண்டு மாநில நுகர்வோர் பாதுகாப்புச் சபையினை மறு சீரமைத்து உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளான வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் (MP) D.M. கதிர் ஆனந்த், தஞ்சாவூர் MP S. முரசொலி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) S.R. ராஜா மற்றும் விக்கிரவாண்டி MLA அன்னியூர் சிவா உள்ளிட்ட 22 உறுப்பினர்கள் இக்குழுவில் உள்ளனர்.
இந்தக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள்
கூட்டுறவுத் துறை செயலாளர்,
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர்,
பொது விநியோக மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர்,
மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையப் பதிவாளர்,
தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்.