புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பரிந்துரைக்கப் பட்டதையடுத்து, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவியேற்றார்.
நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் உள்ள அனுபவத்திற்காக குடியரசுத் தலைவரால் நியமன உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இவர் பரிந்துரைக்கப் பட்டார்.
இவரது இரண்டாவது பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 அன்று முடிவடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 அன்று மீண்டும் பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தால் கட்சியின் மூத்த தலைவரான இவர், முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.