மாநிலச் சட்டமன்றங்களின் செயல்திறன் குறித்த அறிக்கை 2024
May 22 , 2025 19 days 62 0
இந்தியாவின் மாநில சட்டமன்றங்களானது சராசரியாக 30 நாட்களுக்கும் மிகக் குறைவாகவே கூடுகின்றன.
2017 ஆம் ஆண்டில் சராசரியாக 28 நாட்கள் சட்டமன்றங்கள் கூடின.
பெருந்தொற்று ஏற்பட்ட 2020 ஆம் ஆண்டில் சட்டமன்றங்களின் அமர்வு நாட்களின் எண்ணிக்கை 16 ஆகக் குறைந்துள்ளது.
அப்போதிருந்து, இது ஆண்டிற்கு 20 நாட்கள் என்ற எண்ணிக்கைக்கு அருகிலேயே உள்ளது.
2024 ஆம் ஆண்டில் ஒவ்வோர் அமர்வின் சராசரி கால அளவு 5 மணிநேரம் ஆகும்.
ஒடிசா மாநிலச் சட்ட மன்றமானது, அதிக நாட்கள் (42 நாட்கள்) கூடியது அதைத் தொடர்ந்து கேரளா (38) மாநில சட்டமன்றம் உள்ளது.
பெரிய மாநிலங்களில், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மாநிலச் சட்டமன்றங்கள் தலா 16 நாட்கள் கூடின.
2024 ஆம் ஆண்டில், மாநிலச் சட்டமன்றங்கள் சராசரியாக ஏழு நாட்களுக்கு நிதிநிலை ஒதுக்கீடுகள் குறித்து விவாதித்தன.
2017 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், கேரள சட்ட மன்றம் சராசரியாக 44 நாட்களும், அதைத் தொடர்ந்து ஒடிசா (40) மற்றும் கர்நாடகா (34) ஆகிய மாநிலச் சட்டமன்றங்களும் கூடின.
அரசியலமைப்பின் 178வது சரத்து ஆனது, சட்டமன்றங்கள் சபாநாயகராகவும் துணை சபாநாயகராகவும் இரண்டு உறுப்பினர்களை விரைவில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகிறது.
இருப்பினும், ஜார்க்கண்ட் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வாறு ஒரு அவைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.
கூடுதாக, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மக்களவைக்கும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
மசோதாக்களைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டில் மாநிலச் சட்டமன்றங்கள் சராசரியாக 17 மசோதாக்களை நிறைவேற்றின.
நிறைவேற்றப்பட்ட 500க்கும் மேற்பட்ட மசோதாக்களில், கர்நாடகா அதிகபட்சமான (49) மசோதாக்களை நிறைவேற்றியது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு (45) அதிக மசோதாக்களை நிறைவேற்றியது.
டெல்லி ஒரு மசோதாவை மட்டுமே நிறைவேற்றியுள்ளது அதைத் தொடர்ந்து இராஜஸ்தான் 2 மசோதாக்களை நிறைவேற்றியது.
நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களில் ஐம்பத்தொரு சதவீதம் அல்லது சுமார் 250க்கும் மேற்பட்டவை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குள் நிறைவேற்றப்பட்டன.
எட்டு மாநிலச் சட்ட மன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாளுக்குள் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றின.