மாநிலத் திட்டக் குழு ஆணையத்தின் நான்கு அறிக்கைகள் தமிழக முதலமைச்சரிடம் தற்போது சமர்ப்பிக்கப் பட்டன.
இதில் ஒரு அறிக்கையானது ‘தமிழ்நாட்டில் விவசாயம் சாராத ஊரக வேலைவாய்ப்பு’ என்று தலைப்பிடப் பட்டது.
இது மிக அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச விவசாயம் சாராத ஊரக வேலைவாய்ப்பு கொண்ட 12 மாவட்டங்களின் 6 கிராமங்களில் எடுக்கப் பட்டது.
இது விவசாயத்தில் இருந்து மாறுகின்ற ஒரு மிக முக்கியமான மாற்றத்தைச் சுட்டிக் காட்டியது.
இது கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறை போன்ற விவசாயம் சாராத துறைகளில் பணியாளர்கள் அதிகரித்து வரும் ஒரு எண்ணிக்கையாகும்.
இம்மாநிலத்தில், 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களும் 50% பெண் தொழிலாளர்களும் தற்போது வேளாண்மை சாராத பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆண் தொழிலாளர்கள், மிக குறிப்பாக இளைஞர்கள் கட்டுமான தொழில்துறையில் அதிகம் ஈடுபட்டுள்ள துறையாக உருவெடுத்துள்ளது.
உற்பத்தித் துறையானது, அனைத்து வயதினரிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதன்மைத் துறையாக உள்ளது.
2012 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்புகளுக்காக விவசாயத்தைச் சார்ந்திருப்பது 20% என்ற அளவிற்கு குறைவது நிகழ்ந்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு வழி வகுக்கும் இளம் தொழிலாளர்கள் (15–34 வயதுடையவர்கள்) சிறந்த ஊதியம் மற்றும் அதிக நிலைத் தன்மையின் காரணமாக வேளாண் சாராத வேலைகளை விரும்புகிறார்கள்.
மற்ற மூன்று அறிக்கைகள் -
ஒரு நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வை,
தமிழ்நாட்டின் வாகன உற்பத்தித் துறையின் எதிர்காலம் மற்றும்
தமிழ்நாடு மாநிலத்தினை மாற்றி மறுவடிவமைக்கச் செய்தல் – ஒரு அறிவுசார்ப் பொருளாதாரத்திற்கான பாதை.