TNPSC Thervupettagam

மாபெரும் தோல் தொழிலகத் தொகுதிகள்

June 12 , 2026 2 days 55 0
  • பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் சுமார் ₹898 கோடி முதலீட்டில் மாபெரும் அளவிலான தோல், காலணி மற்றும் உதிரிபாகங்கள் தொழிலகக் குழுமங்களை மத்திய அரசு நிறுவி வருகிறது.
  • இந்தக் குழுமங்கள் முசாபர்பூர் (பீகார்), சீதாபூர்-மோரேனா (மத்தியப் பிரதேசம்), ராய்காட் (மகாராஷ்டிரா) மற்றும் ராணிப்பேட்டை (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் உருவாக்கப்பட உள்ளன.
  • இந்தத் திட்டங்கள் இந்தியக் காலணி மற்றும் தோல் மேம்பாட்டுத் திட்டத்தின் (IFLDP) 2021-26-இன் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
  • பெரும் அளவிலான தோல் தொழிலகக் குழுமங்கள் என்பவை தோல் மற்றும் காலணித் தொழில்களுக்குத் தேவையான பொதுவான உள்கட்டமைப்பு, தளவாட வசதிகள் மற்றும் உற்பத்தி ஆதரவை வழங்கும் தொழில்துறைப் பூங்காக்கள் ஆகும்.
  • சில குழுமங்கள் தோல் பதப்படுத்தும் அலகுகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் (CETP) உள்ளடக்கியிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்