மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் 2025
March 18 , 2025 502 days 534 0
புது டெல்லியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக கிராண்ட் பிரிக்ஸ் போட்டியானது இந்தியா நடத்திய முதலாவது சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியாகும்.
இது 2028 ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டியாக நடைபெற உள்ளது.
இந்திய அணியானது 45 தங்கம், 40 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 134 பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.