மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் இரயில் முனையம் ஆனது, மிகை மெய்த் தோற்றத் திரைகள் பொருத்தப்பட்ட இந்தியாவின் முதல் இரயில் நிலையமாக மாறி உள்ளது.
இரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தற்போது விலங்குகளை நேரில் சந்திக்க முடிவதோடு பனிப்பொழிவு மற்றும் தந்திரக் காட்சிகளை நேரில் காணலாம் மற்றும் உலகத்தைக்கிட்டத்தட்ட ஒரே இடத்தில் சுற்றிப் பார்க்கலாம்.
இது இரயில்வே நிர்வாகத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதையும், பயணிகளுக்கு சில வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மிகை மெய்த்தோற்றம் (AR) என்பது உண்மையான நேரடி நிகழ்வுகளை மிகைப் படுத்திக் காட்டும் ஒரு தொழில்நுட்பமாகும்.
இது எண்ணிம காட்சி கூறுகள், ஒலி அல்லது தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படும் பிற உணர்ச்சி தூண்டுதல்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.