சின் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு இடையேயான பல வன்முறை மோதல்களைத் தொடர்ந்து மியான்மரின் சின் மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 4,000க்கும் மேற்பட்ட அகதிகள் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மிசோராம் மாநிலத்தின் சாம்பாய் மாவட்டத்திற்குள் நுழைந்தனர்.
சின்கள் இந்தியாவில் உள்ள மிசோக்களுடன் தொடர்புடைய ஒரு இனக்குழுவாகும்.
அவர்களில் பலர் மியான்மரின் இராணுவத்தினை எதிர்த்துப் போராடும் இராணுவ எதிர்ப்புக் குழுக்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.
மிசோராமின் மிசோ மக்கள் சின்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளனர், ஆனால் எல்லைகளில் அனைத்து இயக்கமும் 2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.
மிசோரம் தங்குமிடம் மற்றும் உதவியை வழங்கினாலும், வள நெருக்கடியினை எதிர் கொள்கிறது மற்றும் அங்கு குடிமக்கள் அல்லாதவர்களைப் பதிவு செய்யவும் அனுமதி கோருகிறது.