8வது இந்திய இலங்கை இருதரப்புக் கூட்டுப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 04 தொடங்கி அக்டோபர் 15 வரை நடைபெற உள்ளது.
இது இலங்கையின் அம்பாரா என்னுமிடத்திலுள்ள போர்ப் பயிற்சிப் பள்ளியில் நடத்தப் படும்.
இப்பயிற்சியானது மித்ர சக்தி என அழைக்கப்படுகிறது.
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 120 வீரர்களை உள்ளடக்கிய அனைத்து ஆயுதப் படைப் பிரிவானது இலங்கை இராணுவத்தின் பட்டாளத்துடன் இணைந்து இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்.
7வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் பூனேவிலுள்ள வெளிநாட்டுப் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.