TNPSC Thervupettagam

மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களின் உரிமைகள் பிரகடனம்

April 28 , 2024 19 days 104 0
  • 2010 ஆம் ஆண்டில், செட்டாசியன் உரிமைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற மாநாட்டில் மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களின் உரிமைகளுக்கான பிரகடனம் ஆனது சமார்பிக்கப்பட்டது.
  • இந்தப் பிரகடனம் ஆனது மீனுருவ நீர்வாழ் பாலூட்டி இனங்களுக்குக் குறிப்பாக ஓங்கில்கள் மற்றும் திமிங்கலங்கள், ஆகியவற்றிற்கு வாழ்வதற்கான உரிமை மற்றும் சட்டப்பூர்வ ஆளுமை ஆகியவற்றை வழங்குகிறது.
  • தற்போது, ஒரு புதிய ஒப்பந்தத்தில் திமிங்கலங்கள் மற்றும் ஓங்கில்கள் அதிகாரப் பூர்வமாக "சட்டப்பூர்வ நபர்கள்" என அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் குக் தீவுகள், பிரெஞ்சு பாலினேசியா, அயோடேரோவா (நியூசிலாந்து) மற்றும் டோங்கா ஆகிய சில நாடுகளைச் சேர்ந்த பசிபிக் தன்னாட்டு அமைப்பின்  தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்