2024-25 ஆம் நிதியாண்டில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை முந்தி, மொத்த ஏற்றுமதி மதிப்பில் இந்தியாவின் முதன்மை ஜவுளி ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 29 சதவீத வளர்ச்சியுடன், சுமார் 7.99 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதியை மாநிலம் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் (சுமார் 36.61 பில்லியன் டாலர்) தமிழ்நாடு 21.84 சதவீதப் பங்களிப்பை அளிக்கிறது.
ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து குஜராத் (5.64 பில்லியன் டாலர்) மற்றும் மகாராஷ்டிரா (3.83 பில்லியன் டாலர்) ஆகியவையும் உள்ளன.