TNPSC Thervupettagam

முதலாம் இராஜேந்திர சோழனின் கடற்படைத் திறன்

August 3 , 2025 2 days 15 0
  • கடற்படை மேலாதிக்கமானது சோழப் பேரரசை அதன் மகிமையின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
  • முதலாம் இராஜேந்திர சோழனின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ், சோழக் கடற்படை அதன் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தது.
  • கி.பி 1012 ஆம் ஆண்டில் அவர் அரியணை ஏறினார்
  • இந்தியாவின் தெற்கு தீபகற்பம் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், சோழர்கள் கடல்களுக்கான ஒரு தடையற்ற அணுகலைக் கொண்டிருந்தனர்.
  • அதன் மூலம் அவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையிலான அரசியல் விரிவாக்கத்தின் ஓர் அரங்கமாக மாறினர்.
  • இராஜேந்திரனின் ஆட்சி சோழர்களின் வெளிநாட்டு ஆட்சி கையகப்படுத்துதல் என்ற இலட்சியத்தின் மிகவும் உறுதியான கட்டத்தைக் குறித்தது.
  • இந்த காலக் கட்டத்தில் தொடங்கப் பட்ட கடற்படைப் படையெடுப்புகள் இலங்கையை இணைப்பதற்கும், வங்காள விரிகுடா முதல் மலாய் தீபகற்பத்தின் தொலைதூரப் பகுதிகள் வரை ஒரு துணிச்சலானப் படையெடுப்பிற்கும் வழி வகுத்தன.
  • மலாய் தீபகற்பத்தின் மீதான வெற்றி இராஜேந்திரனுக்கு கடாரம் கொண்டான் (கடாரத்தை வென்றவர்) என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
  • சோழர்களின் கடற்படையில் பல்வேறு தரங்களின் கீழ் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் இருப்பு அவர் ஆட்சியின் வணிக மற்றும் இராணுவச் நோக்கங்களுக்காக சேவை செய்தது.
  • K. A. நீலகண்ட சாஸ்திரி தனது The Cōlas என்றப் புத்தகத்தில் இராஜேந்திரனின் கடற் படைப் படையெடுப்புகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கினார்.
  • இது குறிப்பாக ஈழ மண்டலம் (இலங்கை) மற்றும் ஸ்ரீவிஜய இராட்சியத்தின் மூலோபாயக் கோட்டையான கடாரத்தைக் குறி வைத்து மேற்கொள்ளப் பட்டது.
  • கி.பி 1017 ஆம் ஆண்டில், இராஜேந்திரன் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்க்கமான படையெடுப்பைத் தொடங்கினார்.
  • அது அவரது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு காலமாகும்.
  • மேலும் இது அவரது தந்தை முதலாம் இராஜராஜ சோழனால் தொடங்கப்பட்ட முயற்சிகளின் உச்சக் கட்டத்தைக் குறித்தது.
  • சோழர்களின் வெற்றி சிங்கள ஆட்சியாளர் ஐந்தாம் மஹிந்தாவின் முப்பத்தி ஆறு ஆண்டு கால ஆட்சியின் முடிவோடு ஒத்துப் போனது.
  • இலங்கையில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மகாவம்சத்தின் படி இந்தத் தகவல் உறுதி ஆனது.
  • இது கி.பி 1017 ஆம் ஆண்டு தேதியிடப் பட்டது.
  • இலங்கையில் சோழர்களின் ஈடுபாடு கி.பி 907 முதல் 955 வரை ஆட்சி செய்த முதலாம் பராந்தக சோழனின் ஆட்சியில் இருந்து ஆரம்பித்ததாகும்.
  • இருப்பினும், அத்தீவின் வடக்குப் பகுதிகளை இணைத்தவர் இராஜராஜர் தான்.
  • அங்கு சில பிரதேசங்கள் உள்ளூர் சிங்கள ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த போதிலும், சோழர்களின் பிடி அங்கு படிப்படியாக இறுக்கமடைந்தது.
  • இராஜேந்திரனின் தாக்குதல் அவரது தந்தையின் தாக்குதலை விட மிகத் தீவிரமாக  இருந்தது.
  • அவரது படைகள் ஐந்தாம் மஹிந்தாவைக் கைப்பற்றி, அவரது கிரீடம் உட்பட அரச உடைமைகளைக் கைப்பற்றின.
  • அந்தத் தீவின் மீதான அவரது கட்டுப்பாடு, அதை ஒரு முழுமையான சோழ மாகாணமாக மாற்றும் அளவுக்கு விரிவானதாக இருந்தது.
  • இராஜேந்திரனைக் குறிக்கும் திருமன்னி வளரன் என்ற பட்டப் பெயரைக் கொண்ட கல்வெட்டுகள் இலங்கையின் பொலன்னருவா அருகே காணப்பட்டன.
  • சிவன் மற்றும் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் சோழக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோயில்கள், சோழர்களின் செல்வாக்கை அங்கு மேலும் குறிப்பிட்டுக் காட்டின.
  • இப்படையெடுப்பிற்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி 1029 ஆம் ஆண்டில், ஒரு புதிய கிளர்ச்சி அங்கு வெடித்தது.
  • இரகசியமாக வளர்க்கப்பட்ட ஐந்தாம் மஹிந்தாவின் மகன் கசபா, அங்கு ஒரு வெற்றி கரமான கிளர்ச்சியை முன்னேடுத்து மேற்கொண்டார்.
  • ஆறு மாத மோதலுக்குப் பிறகு, அவர் மீண்டும் அரசக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, முதலாம் விக்கம்பாகுவாக ஆட்சி செய்து, சிங்கள இறையாண்மையை மீண்டும் நிறுவினார்.
  • ஆனால் இராஜேந்திரனின் ஏகாதிபத்தியம் இலங்கையுடன் நிற்க வில்லை.
  • கி.பி 1025 ஆம் ஆண்டில், கங்கைக்கு அவர் மேற்கொண்ட படையெடுப்பிற்குப் பிறகு, அவர் தனது பார்வையை கிழக்கு நோக்கி ஒரு செழிப்பான கடல்சார் இராட்சியமான ஸ்ரீவிஜயத்தை நோக்கித் திருப்பினார்.
  • இந்த தென்கிழக்கு ஆசியப் பேரரசு இந்தியாவை சீனாவுடன் இணைக்கும் முக்கியக் கடல் பாதைகளைக் கட்டுப்படுத்தியதோடு மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் ஜாவா உள்ளிட்ட பிரதேசங்களை ஆட்சி செய்தது.
  • ஆரம்பத்தில், சோழர்களுக்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் இடையிலான உறவுகள் சுமூகமாக இருந்தன.
  • சூடாமணி விகாரைக் கட்டுவதற்காக வேண்டி இராஜராஜ சோழன் நாகப்பட்டினத்தில் சைலேந்திர வம்சத்தைச் சேர்ந்த மார விஜயோத்துங்கவர்மனுக்கு நிலம் வழங்கினார்.
  • இந்த இரண்டு இராஜ்ஜியங்களுக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திரப் பணிகள் தொடர்ந்து நடந்தன.
  • ஸ்ரீவிஜயர் கி.பி 1003 மற்றும் 1008 ஆகிய ஆண்டுகளில் தூதர்களை அனுப்பினார், அதே நேரத்தில் சோழர்கள் கி.பி 1015, 1033 மற்றும் 1077 ஆகிய ஆண்டுகளில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
  • திருவாலங்காடு செப்புத் தகடுகளில் உள்ள கல்வெட்டுகள் கடாரத்தைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிடுகின்றன.
  • ஒரு தமிழ் பிரசாஸ்தி (ஒரு ஆட்சியாளரைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு) இன்னும் சில விவரங்களை வழங்குகிறது.
  • ஒரு கூற்று, சோழர்களின் கடல்சார் வர்த்தகத்தில் ஸ்ரீவிஜயரின் தலையீட்டால் இந்த மோதல் ஏற்பட்டது என்று கூறுகிறது.
  • மற்றொரு கூற்று, கடல்சார் மேலாதிக்கத்தை அடைவதற்கும் வெளிநாட்டுக் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குமான இராஜேந்திரரின் பரந்த இலட்சியத்தின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறது.
  • இராஜேந்திரரின் தென்கிழக்கு ஆசியப் படையெடுப்பு விரைவாகவும் தீர்க்கமாகவும் இருந்தது.
  • சோழக் கப்பல்கள் வங்காள விரிகுடாவைக் கடந்து ஸ்ரீவிஜய சக்தியின் மையத்தில் தாக்கின.
  • கடாரம் கைப்பற்றப்பட்டதோடு, மாற விஜயோத்துங்க வர்மனின் வாரிசான சங்கிராம விஜயோத்துங்கவர்மன் சிறை பிடிக்கப் பட்டார்.
  • சோழர்கள் கடல் கடந்து வலிமை பெறுவார்கள் என்று படையெடுப்பு மேற் கொள்ளப் பட்டாலும், கைப்பற்றப்பட்டப் பிரதேசங்களில் நேரடி ஆட்சியை நிறுவ உடனடி முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.
  • இராஜேந்திரனின் வாரிசான முதலாம் வீர ராஜேந்திரன், கடாரத்தை மீண்டும் கைப்பற்றி அதன் ஆட்சியாளரை மீண்டும் அமர்த்தக் கூறினார் என்ற நிலையில் இது முந்தைய வெற்றிகள் தற்காலிகமானவை என்பதைக் குறிக்கிறது.
  • சுமத்ராவிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கி.பி 1088 தேதியிட்ட ஒரு தமிழ் கல்வெட்டு, இப்பகுதியில் சோழர்களின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு மேலும் சான்றுகளை வழங்குகிறது.
  • இது குறைந்தபட்சம் வணிக ரீதியாக இருந்தது.
  • இராணுவ வெற்றிகளுக்கு அப்பால், இந்தப் பயணங்கள் சோழப் பேரரசின் பரந்த இராஜதந்திர வரம்பை எடுத்துக்காட்டுகின்றன.
  • கரந்தை செப்புத் தகடுகளில் உள்ள கல்வெட்டுகள், காம்போஜ மன்னர் (முதலாம் சூரியவர்மன் ஆட்சி செய்த அங்கோர் இராட்சியம்) இராஜேந்திரனுக்கு ஒரு வெற்றி கரமான போர் ரதத்தை அனுப்பி, அதன் மூலம் அவர் தனது எதிரி நாட்டுப் படைகளைத் தோற்கடித்ததை சுட்டிக் காட்டியது.
  • இராஜேந்திரனின் கடற்படைப் பயணங்கள் வரலாற்றில் ஒரு துணிச்சலான அத்தியாயத்தைக் குறித்தன.
  • அவை சோழப் பேரரசின் அரசியல் மற்றும் கலாச்சார வரம்பை இந்தியத் துணைக் கண்டத்திற்கு அப்பால் நீட்டித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்