முதலாவது ஆளில்லா விமானத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையம்
August 18 , 2021 1598 days 747 0
இந்தியாவின் முதலாவது ஆளில்லா விமானத் தடயவியல் ஆய்வகம் மற்றும் ஆராய்ச்சி மையமானது கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது.
சைபர்டோம் என்பது கேரளக் காவல்துறையின் ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும்.
இந்த மையமானது அங்கீகரிக்கப்படாத ஆளில்லா விமானங்களைக் கண்காணிக்கச் செய்வதிலும், காவல்துறையின் பயன்பாட்டிற்காக வேண்டி ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்வதிலும் உதவும்.
இந்த ஆய்வக மற்றும் ஆராய்ச்சி மையமானது ஆளில்லா விமானங்களின் பயன்பாடு மற்றும் அச்சுறுத்தல் அம்சங்கள் குறித்து ஆராயும்.