TNPSC Thervupettagam

முதலாவது இந்திய புத்தாக்கக் குறியீடு

October 18 , 2019 2088 days 685 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் முதலாவது புத்தாக்கக் குறியீட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் புத்தாக்கங்களில் முதல் ஐந்து இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
  • இந்தக் குறியீடானது நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் ஆகியோரால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இது உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் (Global Innovation Index - GII) வரிசையில் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடானது பின்வருவனவற்றின் அடிப்படையில் மாநிலங்களைத் தரவரிசைப் படுத்துகின்றது.
    • அவர்களின் கண்டுபிடிப்புத் திறன்,
    • மாநிலங்களுக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்,
    • புதுமைகளை ஏற்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்களுக்குத் தேவையான நடவடிக்கைகள்.
மாநிலங்களின் செயல்பாடுகள்
  • வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடங்களில் உள்ளன.
  • ஒன்றியப் பிரதேசங்களில் தில்லி, சண்டிகர் மற்றும் கோவா ஆகியவை முதலிடங்களில் உள்ளன.
  • சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்