மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் சிக்கிமின் கேங்டாங் நகரத்தில் “வடகிழக்கு சுற்றுப் பாதைக்கான மேம்பாடு” என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இது மத்திய சுற்றுலாத் துறையின் சுவதேஷ் தர்சன் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுகின்றது. மேலும் இத்திட்டத்தின் கீழ் சிக்கிமில் இது முதலாவது திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ், அமைச்சகமானது சுற்றுலா கட்டமைப்பு வசதிகளான சுற்றுலாத் தகவல் மையம், தியான மையம், கரிமப் பொருள்களல்லாத சூழலைக் கொண்ட சுற்றுலா மையம், குடிசைகள், தொலைதூர இணைப்பு, வாகன நிறுத்தம், பொதுக் கழிப்பறை போன்ற வசதிகளை மேம்படுத்தியிருக்கின்றது.