NTPC புதுப்பிக்கத்தக்க ஆற்றல் லிமிடெட் நிறுவனமானது (NTPC Renewable Energy Ltd – NTPC REL) லடாக்கில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் இயங்குதிறன் திட்டத்தை அமைக்க உள்ளது.
NTPC REL என்பது தேசிய அனல்மின் கழகத்தின் (National Thermal Power Corporation – NTPC)100 சதவீத துணை நிறுவனமாகும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்னாற்பகுப்பு முறை (electrolysis) மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனானது பசுமை ஹைட்ரஜன் எனப்படுகிறது.
இது கார்பன் தடம் அறவே அற்றது ஆகும்.
இந்தியாவில் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை அடைவதற்கு பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆனது முக்கியமான ஒன்றாகும்.
மேலும் இது வட்டார மற்றும் தேசிய அளவில் ஆற்றல் பாதுகாப்பினையும் ஆற்றலினை அணுகுந் தன்மை மற்றும் கிடைக்குந் தன்மை ஆகியவற்றையும் உறுதி செய்கிறது.