மத்தியப் பிரதேசம் ஆனது நாட்டின் முதல் மாநில அளவிலான, பல தேசியப் பூங்கா இடையிலான புலிகள் வழித்தடத்தை உருவாக்க உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் பொதுப்பணித் துறை (PWD) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த வழித்தடம் உருவாக்கப்படுகிறது.
இதில் வனப்பகுதிகளில் சுரங்கப்பாதைகள், மெதுவான வேகத்திலான போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் புலிகளின் நடமாட்டம், சுற்றுலா மற்றும் இணைப்பை சமநிலைப் படுத்தும் வனவிலங்குகளுக்கு உகந்த பாதுகாப்பான வடிவமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இந்த நடைபாதை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான சுற்றுலாவை ஊக்குவிப்பதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.