முதலாவது ஸ்ரெப்ரெனிகாவின் 1995 ஆம் ஆண்டு இனப்படுகொலையின் சர்வதேசப் பிரதிபலிப்பு மற்றும் நினைவு தினம் - ஜூலை 11
July 14 , 2024 632 days 290 0
2024 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்த நாளை நியமித்தது.
இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற இன அழிப்புக் கொடுமைக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய படுகொலைச் சம்பவம் இதுவாகும்.
1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், போஸ்னியா மற்றும் செர்பிய இராணுவம் ஆனது ஸ்ரெப்ரெனிகாவைக் கைப்பற்றி அங்கு இருந்த ஆயிரக்கணக்கான ஆண்களையும் இளைஞர்களையும் கொடூரமாகக் கொன்று 20,000 பேரை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றியது.