உலகளாவிய சுகாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக முதல் BRICS சுகாதார செயற்குழு கூட்டத்தை இந்தியா புது தில்லியில் நடத்தியது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) கட்டமைப்பின் கீழ் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
மக்களை மையப்படுத்திய சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்தும் வகையில், “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பது இதன் கருத்துருவாக இருந்தது.
பெருந்தொற்றுத் தயார்நிலை, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (UHC) ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் மனநலம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற புதிய கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை இந்தியா அறிமுகப் படுத்தியது.
காசநோய் (TB) ஆராய்ச்சி, டிஜிட்டல் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான அணுகல் ஆகியவை முக்கியப் பகுதிகளில் அடங்கும்.