TNPSC Thervupettagam

முதல் எல்லை அடையாளக் குறி

April 28 , 2024 19 days 107 0
  • ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை தமக்கு இடையேயேயான மிகவும் கடுமையான பிராந்திய மோதலுக்குப் பிறகு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கு ஒரு படி முன்னெடுத்து வைத்துள்ளன.
  • அஜர்பைஜான் காராபக் மாகாணத்தின் மீதான முழுக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி-யதையடுத்து, இந்த இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தப் பகுதியானது 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆர்மேனியா நாட்டின் ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • அஜர்பைஜான் காராபக்கின் முழுக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதையடுத்து, அங்கு உள்ள சுமார் 120,000 மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் ஆர்மீனியா நாட்டிற்குத் சென்றனர்.
  • ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாட்டின் அதிகாரிகள் முதல் எல்லை அடையாளக் குறி நிறுவப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்