முதல் டீசல் என்ஜினிலிருந்து மாறிய மின்சார இரயில் என்ஜின்
February 24 , 2019 2739 days 1063 0
வாரணாசியின் டீசல் என்ஜின் பணிமனையில் 10000 எச்.பி. டீசல் என்ஜினிலிருந்து மின்சார என்ஜினாக மாற்றப்பட்ட முதலாவது என்ஜினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
பழைய என்ஜின்களின் மறுசீரமைப்பிற்குத் தேவைப்படும் நிதியில் பாதியளவு நிதி மட்டுமே இந்த மாறுதலுக்குத் தேவைப்படுகின்றது. எனவே இந்த மாறுதலானது செலவினக் குறைத்தலை நிரூபித்துள்ளது.
மேலும் இது சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை இரட்டிப்பாக்குவதற்காக இழுவை சக்தியை மேம்படுத்துவதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் உள்ளது.