இந்தியாவின் முதல் தனியார் இரயில் வண்டியான லக்னோ - டெல்லி தேஜாஸ் விரைவு இரயிலானது அக்டோபர் 05-ம் தேதி தனது வர்த்தக ரீதியிலான இயக்கத்தை ஆரம்பித்தது.
நாட்டில் இந்திய ரயில்வே உணவுப் பிரிவு மற்றும் சுற்றுலாக் கழகத்தாலேயே (Indian Railway Catering and Tourism Corporation - IRCTC) முழுமையாக இயக்கப்படும் முதல் இரயில் வண்டியாக இது உருவெடுத்துள்ளது.
முதல்முறையாக IRCTC ஆனது இந்த வண்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புடைய ஒரு இலவசக் காப்பீட்டையும் வழங்குகின்றது.