TNPSC Thervupettagam

முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

August 24 , 2025 5 days 124 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று தமிழக முதல்வர், மாநில உதவி பெறும் நகர்ப்புற தொடக்கப் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
  • பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தொடக்க விழாவில் தலைமை விருந்தினராகக் பங்கேற்பார்.
  • இந்த விரிவாக்கம் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 3.05 லட்சம் கூடுதல் மாணவர்கள் பயனடைவார்கள்.
  • 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, 34,987 பள்ளிகளில் சுமார் 17.53 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, ஆரம்பத்தில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளுக்கும், படிப்படியாக நகர்ப்புற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
  • இதுவரை, இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமே அமைந்து உள்ள அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் மட்டும் செயல்படுத்தப்பட்டது.
  • 2025-26 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு 600.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
  • மதிப்பீடுகள் இந்தத் திட்டம் அரசு தொடக்கப் பள்ளிகளில் வருகையை அதிகரித்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது, மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதை 63.2% குறைத்தது மற்றும் கடுமையான நோய்களை 70.6% குறைத்தது என்பதைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்