TNPSC Thervupettagam

முன்னெச்சரிக்கை சுற்றறிக்கை (LOC) வழிகாட்டுதல்கள்

March 31 , 2026 12 hrs 0 min 31 0
  • கட்டுப்பாட்டை வலுப்படுத்தவும், முகமைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் முன்னெச்சரிக்கை சுற்றறிக்கைகளை (LOCs) வெளியிடுவதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.
  • தேசிய மகளிர் ஆணையம் (NCW), தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) போன்ற சட்டரீதியான அமைப்புகள் நேரடியாக LOC-களைக் கோர முடியாது மாறாக அவை காவல்துறை அல்லது மத்திய முகமைகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
  • LOC படிவங்களில் இப்போது தடுத்து நிறுத்தித் தகவல் தெரிவித்தல், வெளியேறுவதைத் தடுத்துத் தகவல் தெரிவித்தல் அல்லது சிறப்பு நிகழ்வுகளுக்காக "குறிப்புகளைப் பார்க்கவும்" ஆகிய 3 தெளிவான நடவடிக்கைகள் உள்ளன.
  • உளவுத்துறை (IB) மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்பு (CBI) போன்ற முகமைகள், தேசியப் பாதுகாப்பு அல்லது பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளுக்கு மட்டுமே "குறிப்புகளைப் பார்க்கவும்" என்ற வசதியைப் பயன்படுத்த முடியும்.
  • ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட முகமை 3 மணி நேரத்திற்குள் அவரைத் தனது காவலில் எடுக்க வேண்டும் அல்லது காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் 24 மணி நேரத்திற்குள் முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • குற்றவாளிகள் அல்லது தலைமறைவாக உள்ளவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் குடியேற்றப் பணியகத்தால் (BoI) இந்த LOC பயன்படுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்