TNPSC Thervupettagam

முன்னேற்றக் கண்காணிப்பு மதிப்பீட்டு அறிக்கை

May 13 , 2023 819 days 374 0
  • உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் மற்றும் UNFPA ஆகியவற்றின் முன்னேற்றக் கண்காணிப்பு மதிப்பீட்டு அறிக்கையானது, சமீபத்தில் நடைபெற்ற 'சர்வதேச பேறு கால பச்சிளம் குழந்தைகள் சுகாதார மாநாட்டில்' (IMNHC 2023) வெளியிடப் பட்டது.
  • 2020-2021 ஆம் ஆண்டில் மொத்தம் 4.5 மில்லியன் இறப்புகள் பதிவானதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • இது பேறுகாலத் தாய்மார்கள் இறப்பு (0.29 மில்லியன்), இறந்து பிறந்த குழந்தைகள் (1.9 மில்லியன்) மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகள் (2.3 மில்லியன்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • உலக அளவில் பதிவான பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளில் 60 சதவீதத்தினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • மேலும், உலகளவில் உயிருடன் பிறந்த குழந்தைகள் எண்ணிக்கையில் இந்தியா 51 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் உலகளவில் பதிவான 4.5 மில்லியன் என்ற மொத்த இறப்புகளில் இந்தியா 7,88,000 பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • பேறுகாலத் தாய்மார்கள் இறப்புகள், இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்புகளின் பதிவில் இந்தியாவினைத் தொடர்ந்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்காளதேசம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் தெற்கு ஆசியா ஆகியவை அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளப் பகுதிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்