முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் முறைக்கான சிறப்பு மையம்
December 17 , 2022 867 days 362 0
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISc) இந்தியாவின் முதல் முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் முறைக்கான ஒரு சிறப்பு மையத்தினைத் தொடங்கியுள்ளது.
திசு பொறியியல், மீளுருவாக்க மருத்துவம் மற்றும் புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் மேலும் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதற்காக வேண்டி ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான செயற்கருவிகளை வழங்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும்.
இது முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் அமைப்புகளுக்கான அணுகல் வாய்ப்புகளை வழங்குவதோடு, ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானப் பயன்பாடுகள் தொடர்பான தங்கள் பணியை மேலும் துரிதப்படுத்தவும் உதவுகிறது.