ULLAS (சமூகத்தில் அனைவருக்குமான வாழ்நாள் முழுவதுமான கற்றல் குறித்து புரிந்து கொள்தல்) முன்னெடுப்பின் கீழ் முழுமையாக 'கல்வியறிவு பெற்றதாக' அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 91.33% கல்வியறிவு விகிதத்துடன் இம்மாநிலம் இந்தியாவில் 3வது இடத்தில் உள்ளது.
வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பின் (PLFS 2023–2024) படி, மிசோரம் 98.2% கல்வியறிவு விகிதத்தை அடைந்திருந்தது.