முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற இந்தியாவின் முதல் பஞ்சாயத்து
October 8 , 2022 1418 days 949 0
கேரளாவின் புல்லம்பாறை என்ற பஞ்சாயத்தானது, அதன் குடியிருப்பாளர்கள் மத்தியில் முழு டிஜிட்டல் கல்வியறிவைப் பெற்ற இந்தியாவின் முதல் கிராமப் பஞ்சாயத்து ஆக மாறியது.
அம்மாநில அரசு 800 அரசு சேவைகளை இணைய வழியில் கிடைக்கச் செய்துள்ளது.
மேலும், எண்ணிமக் கல்வியறிவு பெற்ற மக்கள் அவற்றை வெகு அதிகபட்சமாகப் பயன்படுத்திட வழி வகையும் செய்துள்ளது.