TNPSC Thervupettagam

மூன்றாவது தன்னார்வ தேசிய மதிப்பாய்வு

August 2 , 2025 14 hrs 0 min 14 0
  • நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் உயர் மட்ட அரசியல் மன்றத்தில் (UN HLPF) இந்தியா தனது மூன்றாவது தன்னார்வ தேசிய மதிப்பாய்வை (VNR) வழங்கியது.
  • 2030 ஆம் ஆண்டு செயல்பாட்டு நிரலுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த மதிப்பாய்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • 2015 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 248 மில்லியன் மக்கள் பல பரிமாண வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டனர்.
  • கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் அதற்குப் பிறகும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாவின் கீழ் 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இலவச உணவு தானியங்களைப் பெற்றனர்.
  • 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் 55 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுகாதாரப் பாதுகாப்பை வழங்கியது.
  • போஷான் அபியான் திட்டத்தின் பலன் 2024 ஆம் ஆண்டிற்குள் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளைச் சென்றடைந்தது.
  • PM-KUSUM மற்றும் தேசிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம் போன்ற திட்டங்களால் ஆதரிக்கப்படும் இந்தியாவின் தூய்மையான எரிசக்தி திறன் 2025 ஆம் ஆண்டில் 180 GW அளவைத் தாண்டியது.
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 3வது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக இந்தியா உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் ஜன் தன் திட்டத்தின் கீழ் 50 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டன, இதன் மூலம் JAM (ஜன் தன்–ஆதார்–மொபைல்) பரவல் சாத்தியமாகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்