மூன்று சிறிய டைடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பூங்காக்கள்
May 24 , 2023 1118 days 580 0
சேலம், தஞ்சாவூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ள ‘சிறிய டைடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பூங்காங்களுக்கான’ அடிக்கல் நாட்டு விழாவினை தமிழக முதல்வர் அவர்கள் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டத்தின் ஓமலூர் தாலுக்காவிலும், தஞ்சாவூர் மாவட்டத்தின் பிள்ளையார் பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் மீளவிட்டான் என்ற இடத்திலும் இந்த மூன்று டைடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.