ரூர்கேயின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மருந்து எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக 3b எனும் மூலக் கூறினைக் கண்டுபிடித்துள்ளனர்.
மூலக்கூறு 3b, KPC-2 க்ளெப்சில்லா நிமோனியா தொற்றுகளுக்குச் சிகிச்சையளிக்க மெரோபெனெமுடன் இணைந்து செயல்படுகிறது.
இது β-லாக்டேமஸ் தடுப்பானாகச் செயல்பட்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளைச் சிதைக்கும் நொதிகளைத் தடுக்கிறது.
KPC-2 என்பது உலக சுகாதார அமைப்பின் முதன்மையான சுகாதார அச்சுறுத்தல்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு மீயுயுரி ஆகும்.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது அதிகரித்து வரும் உலகளாவிய அச்சுறுத்தலான நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்புத் திறனை (AMR) தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.