TNPSC Thervupettagam

மெட்ராஸ் முள்ளெலி ஆய்வு

January 29 , 2026 2 days 28 0
  • தமிழ்நாடு வனத்துறையானது, தூத்துக்குடி மாவட்டத்தின் தேரி வனப்பகுதியில் மெட்ராஸ் முள்ளெலி குறித்த தனது முதல் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
  • மெட்ராஸ் முள்ளெலியானது (Paraechinus nudiventris), உள்ளூரில் முள்ளெலி என்று அழைக்கப் படுகிறது என்பதோடு இது தென்னிந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அரியவகை இரவு நேரப் பாலூட்டி ஆகும்.
  • இந்த ஆய்வானது தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) தலைமையில் நடத்தப்படுகிறது.
  • ரேடியோ தொலையளவியல் தொழில்நுட்பமானது, விலங்குகளின் நடமாட்டம், வாழ்விடப் பயன்பாடு மற்றும் நகரமயமாக்கல், பூச்சிக்கொல்லியின் தாக்கம் போன்ற அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும்.
  • இந்த ஆய்வானது ஒரு பாதுகாப்புச் செயல் திட்டத்தைத் தயாரிப்பதையும், IUCNன் செந்நிறப் பட்டியலில் "தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்" என்ற நிலையிலிருந்து "அச்சுறு  நிலையில்" உள்ள இனமாக மறுவகைப்படுத்துவதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்