திறன்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப் படும் நினைவகச் சில்லுகளின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக ஏற்படும் மெம்ஃப்ளேஷன் இந்தியாவின் மின்னணுத் துறையைப் பாதித்து உள்ளது.
மெம்ஃப்ளேஷன் என்பது DRAM (இயக்கமுறைத் தோராய அணுகல் நினைவகம்) மற்றும் NAND (Not AND) விரைவு நினைவகச் சில்லுகளின் பற்றாக்குறை மற்றும் அதிகரிக்கும் விலையால் ஏற்படும் பணவீக்கத்தைக் குறிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களிலிருந்து அதிகரித்த தேவை, அதிக அலைவரிசை நினைவக (HBM) உற்பத்தியை நோக்கிய மாற்றம் மற்றும் வழக்கமான மெமரி சிப்களின் குறைவான விநியோகம் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள் ஆகும்.