சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம், இந்த ஆண்டு ஏழாவது முறையாக, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியன்று அதன் முழு நீர்த்தேக்க அளவான 120 அடியை எட்டியது.
இதன் காரணமாக, 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.
மேட்டூர் அணையானது 2025 ஆம் ஆண்டின் ஜூன் 12, ஜூலை 05, ஜூலை 28, ஆகஸ்ட் 19, செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 03 ஆகிய தேதிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டியது.
கடைசியாக இந்த அணை ஒரு வருடத்தில் ஏழு முறை நீர்மட்டத்தை எட்டியது 1977 ஆம் ஆண்டு ஆகும்.
2024 ஆம் ஆண்டில், அது மூன்று முறை நீர்மட்டத்தை எட்டியது.
இந்த அணையின் நீர்மட்டம் (முழு நீர்த்தேக்க அளவு) 120 அடி ஆகும்.