மேற்கு வங்காளத்தில் புதிய ஸ்பிரிங்டெயில் பூச்சி இனங்கள்
August 29 , 2025 8 days 54 0
கொல்கத்தாவில் சலினா ஔரான்டியாமகுலாட்டா மற்றும் சலினா சூடோமொன்டானா எனும் மண்ணில் வசிக்கும் இரண்டு புதிய ஸ்பிரிங்டெயில் பூச்சி இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தச் சிறிய கணுக்காலிகள் கரிமப் பொருட்களைச் சிதைத்து, ஊட்டச்சத்துக்களை மறு சுழற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான மண் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கடைசியாக 1979 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டதுடன், தற்போது பதிவான இந்தக் கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவின் மொத்த சலினா இனங்களின் எண்ணிக்கையை 17 ஆக அதிகரிக்கிறது.
ஸ்பிரிங்டெயில் பூச்சிகள் நிலத்தில் வசிக்கும் பழமையான அறுகாலிகளில் ஒன்றாகும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வளம், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றத்தின் முக்கியக் குறிகாட்டிகளாகச் செயல்படுகின்றன.