2014–15 மற்றும் 2024–25 ஆகிய சில ஆண்டுகளுக்கு இடையில், சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசானது 2,532.59 கோடி ரூபாயைச் செலவிட்டது.
தமிழ் மொழி உட்பட மற்ற ஐந்து செம்மொழிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் 147.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
தமிழுக்கு மட்டும் 113.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சமஸ்கிருதத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீட்டில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தலா 0.5 சதவீதத்திற்கு குறைவாகவும், ஒடியா மற்றும் மலையாளம் ஆகியவை தலா 0.2 சதவீதத்திற்குக் குறைவாகவும் நிதி பெற்றுள்ளன.
2008 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மீதமுள்ள இதர நான்கு செம்மொழிகளுக்கான ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீடு 34.08 கோடி ரூபாய் ஆகும்.
2014-15 மற்றும் 2024-25 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தி, உருது மற்றும் சிந்தி மொழிகளுக்கான ஒருங்கிணைந்த நிதி ஒதுக்கீடு 1,317.96 ரூபாய் ஆகும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 1.2 பில்லியனில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் 21.99% பேர் ஆக உள்ளனர்.