தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோவிலில் மராத்தியர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மோடி எழுத்து வடிவத்தின் ஒரு கற்பாறைக் கல்வெட்டானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
மோடி என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்மையாகப் பேசப்படும் மராத்திய மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு எழுத்து வடிவமாகும்.
இந்தக் கல்வெட்டானது கி.பி.1753 ல் பிரதாப சிம்ஹான் என்பவர் ஆலயத்திற்கு அளித்த நன்கொடைகளைப் பதிவு செய்துள்ளது.