TNPSC Thervupettagam

யானைகள் கணக்கெடுப்பு 2025

October 19 , 2025 3 days 36 0
  • 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தேசிய கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை தற்போது 22,446 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2017 ஆம் ஆண்டில் 27,312 யானைகள் என்ற மதிப்பீட்டிலிருந்து பதிவான 18 சதவீதச் சரிவைக் குறிக்கிறது.
  • இந்தக் கணக்கெடுப்பை சுற்றுச்சூழல் அமைச்சகம், யானைகள் வளங்காப்புத் திட்டம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவை மேற்கொண்டன.
  • அறிவியலாளர்கள் 21,056 சாண மாதிரிகளைச் சேகரித்து, 4,065 தனித்துவமான யானைகளை அடையாளம் காண டிஎன்ஏ அடையாளங்களைப் பயன்படுத்தினர்.
  • இந்தக் கணக்கெடுப்பு 18,255 முதல் 26,645 யானைகள் வரையிலான மொத்த எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு குறியிட்டு மீண்டும் கண்டறியும் மாதிரியைப் பயன்படுத்தியது.
  • கர்நாடகாவில் அதிகபட்சமாக 6,013 யானைகளும், அதைத் தொடர்ந்து அசாமில் 4,159 யானைகளும், தமிழ்நாட்டில் 3,136 யானைகளும் உள்ளன.
  • பிராந்தியங்களில் மிக உயர்ந்ததாக மேற்குத் தொடர்ச்சி மலையில் 11,934 யானைகள் உள்ளன, அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பிராந்தியத்தில் 6,559 யானைகள் உள்ளன.
  • இந்தக் கணக்கெடுப்பு ஆனது M-Stripes (புலிகளுக்கான கண்காணிப்பு அமைப்பு – தீவிரமானப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அந்தஸ்து) செயலியைப் பயன்படுத்தி நிலப்பரப்பு ஆய்வுகள், செயற்கைக்கோள் வரைபடமிடல் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகிய மூன்று கட்ட செயல்முறையைப் பயன்படுத்தியது.
  • உலகளாவிய ஆசிய யானைகள் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் காணப்படுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்