யுகீன் பாரத் தேசிய அருங்காட்சியகத்தின் முதல் காட்சியகம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மத்திய எழில் முற்றம் (சென்ட்ரல் விஸ்டா) என்பதின் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கலாச்சார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இது தற்போதுள்ள தேசிய அருங்காட்சியகத்தை மாற்றி புது தில்லியில் உள்ள வடக்கு தொகுதி மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்களில் அமைந்திருக்கும்.
5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தைக் காட்சிப்படுத்தும் இந்த அருங்காட்சியகம், சிந்து சமவெளிப் பொருட்கள், குப்தர் கால சிற்பங்கள் மற்றும் சோழர் கால வெண்கலங்கள் போன்ற கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும்.
அருங்காட்சியக வடிவமைப்பு மற்றும் மேலாண்மையில் பிரான்சின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, இந்தியாவும் பிரான்சும் கூட்டாக இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கி வருகின்றன.