2025 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அதன் தற்காலிக உலகப் பாரம்பரியப் பட்டியலில் ஏழு புதிய இந்தியத் தளங்களைச் சேர்த்தது.
இது தற்காலிகப் பட்டியலில் உள்ள மொத்த இந்தியத் தளங்களின் எண்ணிக்கையை 69 ஆக அதிகரித்தன.
69 தளங்களில், 49 தளங்கள் கலாச்சாரப் பிரிவின் கீழும், 17 இயற்கைப் பிரிவின் கீழும், மூன்று கலப்புப் பிரிவின் கீழும் சேர்க்கப்பட்டன.
பஞ்ச்கனி மற்றும் மகாபலேஷ்வர் (மகாராஷ்டிரா) ஆகிய இடங்களில் உள்ள தக்காண வரிப் பாறைகள் உலகின் மிகப்பெரிய பசால்டிக் / எரிமலைப்பாறைக் குழம்பு அமைப்புகளில் ஒன்றாக இருப்பதற்காக சேர்க்கப்பட்டன.
செயிண்ட் மேரிஸ் தீவுத் தொகுப்பு (கர்நாடகா) கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த அதன் நெடுவரிசை பாசால்டிக் பாறைக் குழம்பு அமைப்புகளுக்காக பட்டியலிடப்பட்டது.
கிழக்கு காசி மலைகளில் (மேகாலயா) உள்ள மேகலாயன் காலக் குகைகள் அவற்றின் விரிவான சுண்ணாம்புப் பாறைக் குகை அமைப்புகளுக்காக சேர்க்கப்பட்டன.
கிஃபைரில் (நாகாலாந்து) உள்ள நாகா மலை ஓபியோலைட் கண்டத் தகடுகளில் தள்ளப் பட்டு வெளித்தோன்றிய பெருங்கடல் தட்டுப் பிரிவுகளைக் குறிக்கிறது.
விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள எர்ரா மட்டி திப்பலு என்பது கடல் மட்ட மாற்றங்களைக் காட்டும் சிவப்பு மணல் திட்டுகளின் தேசியப் புவி சார் பாரம்பரிய நினைவுச் சின்னமாகும்.
திருப்பதியில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள திருமலை மலைகள் அவற்றின் ஒருங்கிணைந்தச் சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்திற்காக பட்டியலிடப் பட்டன.
கேரளாவில் உள்ள வர்க்கலா அதன் தனித்துவமான கடலோரப் பாறைகள் மற்றும் முக்கியமான புவியியல் அமைப்புகளுக்காக சேர்க்கப்பட்டது.