பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு சிறப்புத் திட்டமான “இளம் அறிவியலாளர் திட்டம்” அல்லது “யுவ விக்யானி காரியகரம்” என்ற திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது இளம் வயதினர்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்து அடிப்படை அறிவைப் பயிற்றுவித்தலை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் கோடை விடுமுறையின்போது தோராயமாக இரண்டு வாரங்களுக்கு இருப்பிடசார் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களிலிருந்தும் மூன்று குழந்தைகள் பங்கு பெறுவர்.