யூரோபோல் என்ற அமைப்பில் இணைந்த ஐரோப்பியம் சாராத 10வது நாடாக தென் கொரியா மாறியுள்ளது.
27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஒரு மனதாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் தென்கொரியாவின் தேசியக் காவல்துறை முகமை இந்த யூரோபோல் அமைப்புடன் இணைந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த நாட்டின் காவல்துறையானது தற்போது யூரோபோல் அமைப்பின் உறுப்பினர் நாடுகளுடன் குற்றவியல் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்புடன் பணியாற்றவும் இயலும்.