TNPSC Thervupettagam

ரஃபேலுக்காக கோல்டன் ஏரோஸ் படைப் பிரிவு மீண்டும் புத்துயிராக்கம்

September 11 , 2019 2113 days 597 0
  • இந்திய விமானப் படையானது (Indian Air Force - IAF) அம்பாலா விமானப் படைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட “கோல்டன் ஏரோஸ்” என்ற 17வது  படைப் பிரிவைப் புத்துயிரூட்டி மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
  • ரஃபேல் போர் விமானங்களின் முதலாவது படைப் பிரிவை இயக்குவதற்குப் பயிற்சி பெற்ற முதலாவது பிரிவு இதுவாகும்.
  • இந்தப் படைப் பிரிவை மீண்டும் பணியில் இணைக்கும் விழாவானது IAFன் தலைமைத் தளபதியான பி.எஸ் தனோவாவால் தலைமை தாங்கப் பட்டது.
கோல்டன் ஏரோஸ் படைப் பிரிவு பற்றி
  • 17வது படைப் பிரிவானது 1951 அக்டோபர் 01 ஆம் தேதி விமானப் படை அதிகாரியான டி.எல். ஸ்பிரிங்கெட் என்பவரின் தலைமையின் கீழ் அம்பாலாவில் ஏற்படுத்தப்பட்டது.
  • ரஷ்யாவைச் சேர்ந்த மிக் - 21 ஜெட் விமானங்களின் செயல்பாடுகளை IAF படிப்படியாக நிறுத்தத் தொடங்கிய பின்னர் இது 2016 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
  • மேலும் இது 1999 ஆண்டில் ஏற்பட்ட கார்கில் மோதலின் போது தற்போதைய விமானப் படைத் தலைமைத் தளபதியான தனோவா என்பவராலும் தலைமை தாங்கப்பட்டது.
அம்பாலா விமானப் படை தளம் பற்றி
  • 1948 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஹரியானாவில் இருக்கும் இந்த அம்பாலா விமானப் படைத் தளமானது இராணுவ மற்றும் அரசாங்க விமானங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இது ஜாகுவார் போர் விமானத்தின் இரண்டு படைப் பிரிவுகளையும் மிக் - 21 பைசனின் ஒரு படைப் பிரிவையும் கொண்டுள்ளது.
  • இந்தத் தளத்தின் முதலாவது தளபதி விமானப் படை அதிகாரி அர்ஜன் சிங் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்