TNPSC Thervupettagam

ரக்ஷா கயான் சக்தி திட்டம்

December 5 , 2018 2411 days 699 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் “ரக்ஷா கயான் சக்தி திட்டத்தை” புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இது உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழிற்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை (IPR - Intellectual Property Right) மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • இது பாதுகாப்புத் துறையில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னெடுப்புகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு உற்பத்தித் துறையால் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்திட்டத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் தர உறுதிப்பாடு பொது இயக்குநரகத்திடம் (Directorate General of Quality Assurance - DGQA) ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்