ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் இந்தியாவில் நடந்த மிக அரிய வனவிலங்கு நிகழ்வான புலி, சிறுத்தை மற்றும் சிவிங்கிப் புலி ஆகியவை ஒன்றாகக் காணப் பட்டன.
இந்த நிகழ்வு சாக்கல் நதிக்கு அருகிலுள்ள மண்டலம் 9-இல் இந்த மூன்று வேட்டையாடும் விலங்குகளும் ஒரே நேரத்தில் 1-2 கி.மீ சுற்றளவில் காணப்பட்டன.
விலங்குகள் வெவ்வேறு வாழ்விடங்கள் மற்றும் வேட்டையாடும் நேரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு இடையேயான போட்டியைத் தவிர்க்கும் "வாழிடப் பகிர்வு" காரணமாக, இத்தகைய சகவாழ்வு அரிதானது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
புலிகள் தங்களது எல்லை ஆதிக்கம் கொண்ட மாமிச உண்ணிகள், சிறுத்தைகள் எந்தச் சூழலிலும் வாழக்கூடியவை மற்றும் நேரடி மோதலைத் தவிர்க்கக் கூடியவை, அதே சமயம் சிவிங்கிப்புலிகள் திறந்த புல்வெளிகளை விரும்புவதோடு, வேட்டையாடுவதற்குத் தனது வேகத்தை மட்டுமே நம்பியுள்ளன.
ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் புலிகள் காப்பகம் சுமார் 70 புலிகள் மற்றும் வளமான வனவிலங்குப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு முக்கியப் பல்லுயிர் பெருக்க மையமாகும்.